சென்னை

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ளது. 

இன்று நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இன்று காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.

இந்த நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இன்று, 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.

இதில் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்ப மனு அளித்த கனிமொழியிடம் நேர்காணல் நிறைவுபெற்றது. கனிமொழியைத் தவிர வேறு யாரும் தூத்துக்குடிக்கு விருப்ப மனு அளிக்காத நிலையில் நேர்காணல் நடைபெற்றது.

இன்று நாமக்கல், விழுப்புரம், சிதம்பரம், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறவில்லை.