டில்லி

ரியானா பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜேந்திர சிங் காங்கிரசில் இணைந்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக களப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.அனைவரும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பிசியாக உள்ளனர். அத்துடன் அதிருப்தி காரணமாகக் கட்சி தாவும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இன்று அரியானா மாநிலம் ஹசார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்  பிரிஜேந்திர சிங், பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக், தீபக் பபாரியா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரிஜேந்திர சிங் தாம் அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியிலான கருத்துவேறுபாடுகள் காரணமாக பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்ததாகத் தெரிவித்தார்.  மேலும் விவசாயிகளின் பிரச்சினை முதல் அக்னி வீரர்கள், மல்யுத்த வீரர்கள் போராட்டம் வரை பல விஷயங்களில் பா.ஜ.க.வுடன் கருத்து வேறுபாடு இருந்ததாகவும், காங்கிரஸ் குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஹிசார் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரிஜேந்திர சிங் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.