சென்னை

மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணி குறித்து கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது  இந்த கூட்டணியில் ம நி ம வுக்கு ஒரு மக்களவை தொகுதி கூட ஒதுக்கப்படாமல் ஒரு மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கமலஹாசனை அரசியல் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 

”தற்போதைய சூழல் தமிழ்நாட்டுக்கும் தேசத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வாத சக்திகளுக்குச் சாதகமாக அமைந்து விடக்கூடாது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனைக் காக்க எடுத்த முடிவு இது” 

என்று விளக்கம் அளித்துள்ளார்