திருச்சி

ன்று திருச்சியில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று பிரதமர் திருச்சிக்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் புதிய விமான முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் அவர், ரூ.19,850 கோடியில் புதிய மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து திருச்சி பால்பண்ணை பகுதியில் உள்ள புஷ்பம் மகாலில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.  கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பொதுச்செயலாளர்கள் கே.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம், பொன் பாலகணபதி, கார்த்திகேயினி உள்பட 150 நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் இல்லை என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நிலைப்பாடு குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள், விவாதங்கள், ஆலோசனைகள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.