சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய வேளாண் அலுவலர்;தோட்டக்கலை உதவி இயக்குனர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், தற்போது உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ,தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி மற்றும் வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) ஆகிய 991 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை  கடந்த 17.04.2021 மற்றும் 18.04.2021 ஆகிய நாட்களில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடத்தியது.

இந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. அதன்படி, தேர்வு முடிவுகளை, தேர்வர்கள்  https://www.tnpsc.gov.in/english/Results.aspx  என்ற இணையதளத்தில் பார்த்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7க்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.