சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழம் சார்பில் விவசாயிகளுக்கு 1 லட்சம்மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா,  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மின் இணைப்பு வழங்கி, அதற்கான ஆணைகளை வழங்கினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் இப்போது நடைபெற்று அரசு, உழவர்களுக்கானது என்றும், இந்தியாவிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழக அரசுஎன்று கூறினார்.

இந்த திட்டத்தின்மூலம், மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள்  வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே  திட்டத்தை முடிக்க மின்சாரத்தட்டுரை திட்டமிட்டுள்ளது.