பெரியகுளம்

மிழக மக்களுக்கு மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால்தான் நன்மை கிடைக்கும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறி உள்ளார்.

வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை நடக்க உள்ளது.  இந்த தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது.  தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன.

அவ்வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ பரப்புரை செய்தார்.   அப்போது வைகோ, “தற்போது ஊழல் செய்துவரும் அதிமுக அமைச்சர்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறை செல்வது உறுதி ஆகும்.

தமிழகத்தில் நடைபெறும்  பல அநீதிகளுக்கு திமுக ஆட்சியில் தான் நியாயம் கிடைக்கும்.  எனவே மக்கள் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.  தமிழக மக்களுக்கு மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் நன்மை கிடைக்கும்” என உரையாற்றி உள்ளார்.