சென்னை

தமிழக அரசு நிபா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுத்துள்ளது.

தற்போது கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப்  பரவி வருகிறது.  தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவலாம் என்னும் அச்சம் உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த நெறிமுறைகளில்

“நோயுற்ற, வைரஸ் அறிகுறி உள்ளவர்களைக் கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின் மற்ற பணிகளைச் சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்படச் சுகாதாரத் துறை ஊழியர்கள் பிபிஇ கிட், முகக்கவசம், கையுறை அணிவது அவசியம்.

மருத்துவ உபகரணங்களைத் தொடர்ச்சியாகக் கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்.

நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் மற்றும் ஊசி போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம் “

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.