சென்னை

னி ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 

தமிழக அரசு இன்று முதல் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை இயக்கிக் காட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் அதில் உள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்பட உள்ளது.

மேலும் தமிழக அரசு,

”எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் நேரடியாக வழங்கப்பட மாட்டாது . தொலைப்பேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குத் திரும்ப வந்துவிடும் சரியான முகவரியுடைய தபால் உறையை விண்ணப்பதாரர்கள் தந்த பின்னர் ஓட்டுநர் உரிமம் தபாலில் அனுப்பப்படும்

என்று அறிவித்துள்ளது.

இதைப்போல ஆர்.சி.புத்தகத்தையும் இனிப் பதிவுத் தபால் மூலமாக மட்டுமே பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.