சென்னை

டிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலி கான் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அண்மையில் பிரபல நடிகர் மன்சூர் அலி கான் தனது கட்சியின் பெயரான தமிழ் தேசியப் புலிகள் என்பதை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார்.  இந்நிலையில் இன்று மன்சூர் அலிகான் ஓரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில்,

”மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ் திறவாய், தரணி போற்றும், ஆரணியே” 

என்று தெரிவித்துள்ளார்.