ட்டி

ற்போது  ஊட்டியில் நடைபெற்று வரும்  பலகலைக்கழக துண வேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றி உள்ளார்.

இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 2 நாள்கள் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாநாட்டில் உரையாற்றினார்.

ஆளுநர் தனது உரையில்

“நான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆளுநராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. பல பிரச்சனைகள் இருந்தன. அனைத்து பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்ததால் தரமும் குறைந்து காணப்பட்டது. இவற்றை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். நாம் இளைஞர்களை கல்வி திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்வதை தவறவிட்டு விட்டோம். மேலும் இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடும்.

திருவள்ளுவரின் ‘கற்க கசடற’ என்ற கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். மாணவர்கள் கற்கும் முறையில் பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. நாட்டின் எதிர்காலம் புதிய தேசியக் கல்விக் கொள்கை ஆகும். இந்த புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்”

என்று தெரிவித்துள்ளார்.