சென்னை

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீரென டில்லிக்குச் சென்றுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.  நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் சட்டசபை செயலகம் மூலம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட10 மசோதாக்கள், சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர்  என டில்லி பயணம் மேற்கொள்கிறார். அவர் இன்று மாலை 5.15 மணிக்குச் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.  நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.