சென்னை

பரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காகச் சென்னை – கோட்டயம் இடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கடந்த 17 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காகக் கோவிலில் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக ரயில்களில் சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனவே சென்னை சென்டிரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. செண்டிரலில் இருந்து இன்று (19-ந்தேதி), வருகிற 26-ந்தேதி, டிசம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி, 31-தேதிகளில் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்:06027) இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

சிறப்பு ரயில்கள் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக கோட்டயம் செல்லும்.

மறு மார்க்கமாக கோட்டயத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி, 27-ந்தேதி, டிசம்பர் 4-ந்தேதி, 11-ந்தேதி, 18-ந் தேதி, 25-ந்தேதி, மற்றும் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதிகளில் சிறப்பு ரயில்கள் (எண்:06028) இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை10.30 மணிக்குச் சென்னை சென்டிரலுக்கு வந்தடையும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.