சென்னை

மாநகராட்சி பகுதிகளில் நாளை மறுநாள் முதல் சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதையொட்டி சென்ற மார்ச் மாதம் முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்ட்ன.

அதன் பிறகு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படவில்லை.

தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் சிறு நகரங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளார்

அதன்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை நாளை மறுநாள் முதல் திறக்க அனுமதி வ்ழங்கப்பட்டுள்ளது.