சென்னை

மிழகத்தின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியும்m தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி காலமானார். அவர் முதுமை சார்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 96 வயடாகும் அவர் உயிரிழந்தார்..

அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற  பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி அவர்கள் மறைந்தார் என்று அறிந்து வருந்துகிறேன்.

இவர் உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்

பாத்திமா பீவி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,”

என்று தெரிவித்துள்ளார்.