தமிழகம் முழுவதும் இனி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிமனை (UDS) மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு கூட்டு மதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுச் செயலாளர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ளது போல் அடுக்குமாடி குறியிருப்புகளுக்கு கூட்டுமதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் இனி அடிமனை மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இரண்டு பத்திரங்கள் பதிவு நடவடிக்கை இந்த மாதம் 30ம் தேதியுடன் கைவிடப்படும்.

1 டிசம்பர் 2023 முதல் கூட்டு மதிப்பில் ஒரே பத்திரம் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதனால் முத்திரை தீர்வை கணிசமாக குறையும் என்றும் இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.