சென்னை

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதாவது ராணிப்பேட்டை, தருமபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.