சென்னை

டுத்த  மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்த நிலையில் இன்று காலையில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது. பகலுக்கு மேல் வானம் வெயிலுடன் காணப்பட்டது.  இன்று சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை  ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும். அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை,  வேலூர்,திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்  கூடிய கனமழை பெய்யும்

நாளை 20-07-2020  மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை  பெய்யும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில  பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி ஆகவும்  குறைந்தபட்சம் 27 டிகிரி  செல்சியஸ் ஒட்டி இருக்கும்.”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

”ஜூலை 19 மற்றும் 20 தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில்  வீசக்கூடும்.

ஜூலை 19 மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகள்,  லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 19 மற்றும் 20 தேதிகளில் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 21 மற்றும் 22 தேதிகளில் கேரளா கடலோர பகுதிகள் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்  காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 19 முதல் 23 தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்”

என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது