சென்னை: ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களும் வைரஸ் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது