தும்பா படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தும்பா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.அழுகையுடன் பேசியுள்ளார்.

“எனது அழகைப்பற்றியோ, எனது நிறத்தைப் பற்றியோ யோசிக்காமல் என்மீது நம்பிக்கை வைத்த தும்பா பட இயக்குநர்.எனது திறமைகளை மதித்து எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் .

என்னை பல இயக்குநர்கள் புறக்கணித்த தருணமும் உண்டு. பெரிய இயக்குநர்கள் கலர் கம்மியாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இப்படி இருக்கும் ஹீரோயினை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று கூட சொன்னார்கள். என்மேல் நம்பிக்கை வைத்தது தும்பா படத்தின் இயக்குநர் ஹரிஷ் ராம் தான் என உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.