மோசடி வழக்கில்,  அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக சுகாதாரதத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  இல்லம் மற்றும் நெருக்கமானவர்கள்  இடங்களில், வருமானவரித்துறை கடந்த மாதம்  சோதனை நடத்தியது.
இந்த நிலையில், வணிக வளாகம் வாங்கிய விவகாரத்தில் ரூ. 5 கோடி மோசடி செய்ததாக  விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் மீது, அவரது அண்ணன் துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.  விஜயபாஸ்கர் மாமனார் சுந்தரம் மற்றும் அவரது சகோதரர் கோபால் ஆகியோருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.