சென்னை: கழகத்தின் வெற்றிப்பயணத்திற்கு தடையாக இருப்பவர்கள் என்னிடம் இருந்து தப்ப முடியாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக என அனைத்துக்கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போதைய கள நிலவரப்படி திமுக அமோக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.  இந்த நிலையில், திமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

அதில், “ஒவ்வொரு தொகுதியிலும் திறம்பட செயல்படும் உடன்பிறப்புகளை கவனித்தே வருகிறேன்; கழகத்தின் வெற்றிப்பயணத்திற்கு வேகத்தடையாக இருப்பவர்களும் என் கவனத்திலிருந்து தப்ப முடியாது – விளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்”  கழக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.