திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா  வைரஸின் தாக்கம் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தீவிரமாகி வருகிறது. இதுவரை , 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 பேர் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது.  அவர்கள் 30 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பெற்றுவந்த மற்ற 2 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் வழியனுப்பி  வைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக புதிதாக எந்தவொரு தொற்றும் உறுதி செய்யப்படாத நிலையில்,  தற்போது திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தமிழத்தில், கோவை, தருமபுரி, ஈரோடு, நாகை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.