திருச்சி:

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்குவதில் மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டி வருகின்றன.
இதன் கடுமையாக பாதிக்கபட்டுள்ள அவர்கள் சொந்த ஊரை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, திருச்சி மாநகர், புறநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புலம்பெயர் தொழிலாளர் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.