சென்னை: அதிமுகவில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.  அதில், ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்,
மேலும் இதுவரை ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்று பொறுப்பு விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று அதிமுகவில் தொழில் நுட்ப பிரிவும் சென்னை, கோவை, மதுரை மற்றும் வேலூர் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.