சென்னை: தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந் நிலையில் தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12448 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 22 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 489 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4895 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.