சென்னை:
ண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பூங்கா இயக்குநர் கர்ண பிரியா அறிவித்துள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

கொரானா தொற்று கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மூலம் விலங்குகளுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்,வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பூங்கா இயக்குநர் கர்ண பிரியா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளுக்கு பரிசோதனை மேற்கோள்ளப்பட்டது. இதில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.