சென்னை: தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ், பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என  உறுதி அளித்தார்.

டிஜிபி திரிபாதி ஓய்வுபெற்றத்தைத் தொடர்ந்து, சைலேந்திரபாபுவை தமிழக டிஜிபியாக அரசு நியமனம் செய்தது. இதையடுத்து, அவர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் திரிபாதி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு,  

டிஜிபியாக பதவியேற்றதில் மகிழ்ச்சி.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்தார்

 தமிழ்நாடு காவல்துறை தலைவராக பணியாற்றுவது ஒரு அரிய சந்தர்ப்பம்

காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

மனித உரிமைகளை மதித்து நடப்பதற்கான பயிற்சியும் காவல்துறையினருக்கு அளிக்கப்படும்.

காவலர்களின் குறைகளையும் கேட்டு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம்ஒழுங்கை பராமரிக்கவும் குற்றம்  நடைபெறாமல் தடுக்கவும் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட காவல் துறை தொடர்பான மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.