சென்னை: மே 26ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி,  நெடூஞ்சாலைத்துறை, ரயில்வே துறை  உள்பட 5 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார்.

அரசு முறை பயணமாக வரும் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.  அதைத்தொடர்ந்து  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர், அங்க  நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதன் காரணமாக, இன்று  நேரு உள்விளையாட்டு அரங்கில்  ஆய்வு செய்த அமைச்சர், எ .வ.வேலு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில்,  பிரதமர் அமரக்கூடிய மேடைகள், ஒலிபெருக்கிகள் ஒளி விளக்குகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இவை பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பது குறித்து இங்கு ஆய்வு செய்ததாக தெரிவித்தார்.

மேலும்,  பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 17,471 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி  தொடங்கி வைக்க இருக்கிறார், நெடுஞ்சாலை துறை மட்டுமின்றி ரயில்வேத்துறை உள்ளிட்ட 5 திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்றும் கூறினார்.  என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நெடுஞ்சாலைதுறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கூறினார்.