சென்னை மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் பெண் பயனிகளின் பாதுகாப்பையும் ஈவ் டீசிங் உள்ளிட்டவற்றில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய நடவடிக்கையை துவங்கியுள்ளது.

அதற்காக மெட்ரோ ரயில் பாதுகாப்பை மேற்கொண்டு வரும் நிறுவனத்தில் தற்காப்பு கலை பயிற்சி பெற்ற பெண்கள் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் சென்னை சென்ட்ரல், ஏர்போர்ட், ஆந்தூர் உள்ளிட்ட நெரிசல் மிகுந்த ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேவைப்படும் நேரத்தில் ரயிலிலும் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தி பிங்க் ஸ்குவாட் அறிமுக நிகழ்ச்சி இன்று சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது.