சென்னை

டைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரும் 19 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்படுகின்றன.

இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற  உள்ளன. அடுத்த நாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம். எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து தி.மு.க ஆலோசனை நடத்தி வருகையில் வரும் 19 ஆம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள் வரும் 19ஆம்  தேதி முதல் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அடுத்த மாதம் 1 -ம் தேதி முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.