புதுச்சேரி:
பேனர் அகற்றும் செலவை வைத்தவர்களிடமே வசூலிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக கடந்த 24-ஆம் தேதி புதுச்சேரி வந்தடைந்தார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவரை வரவேற்கின்றனர். அவரை வரவேற்க புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தது.

சாலையை மறைந்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு காரணமாக அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி செல்ல முடியாமல் சிக்கி கொண்டது. இதில் அலங்கார வளைவு சரிந்து விழுந்து, இதில் அருகிலிருந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி காயமடைந்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பேனர் அகற்றும் செலவை வைத்தவர்களிடமே வசூலிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.