சென்னை:
கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை என்றென்றும் தொடரும் வகையில் களப்பணியாற்றுங்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்றும் சொந்த விருப்பு – வெறுப்புகள் சிறிதளவு தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், திமுகவில் பல்வேறு அணிகளில் திறம்பட செயல்படும் மகளிருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளியுங்கள். வேட்பாளர்கள் தேர்வு, தோழமை கட்சிகளுக்கான இடப்ப்கிர்வு ஒவ்வொரு கட்டத்திலும் நிர்வாகிகள் கடமை உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயலாற்ற வேண்டும் என்றும் தோழமை கட்சிகளுக்கு உரிய அளவிலான இடங்களை மனமுவந்து ஒதுக்கீடு செய்வதில் சுணக்கம் இன்றி செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.