சென்னை:
pub-கள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பாப்-களில் காளை பதினொரு மணி முதல் இரவு பதினொரு மணி வரையும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் 24 மணி நேரமும் பார்களை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டல்களில் காலை பதினொரு முதல் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்ப்டுவதாவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.