பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

நமீதா மாரிமுத்து, நாடியா, அபிஷேக் வெளியேற்றப்பட்ட்டுள்ளதால் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் , ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

நாணயங்கள் வைத்திருக்கும் ஐந்து பேரை அழைத்த பிக் பாஸ் தங்கள் நாணயத்தை பயன்படுத்தி மதுவிற்கு பதிலாக நீங்கள் ஐவரில் ஒருவர் தலைவராக மாறலாம் என்றார். ஆனால் அனைவரும் மது தலைவராக இருக்க விரும்புவதாக தெரிவித்த நிலையில் அடுத்த வாரம் நாணயத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் பாவனி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இந்தநிலையில் இன்று ஸ்ருதி, தாமரையின் நாணயத்தை திருடி விடுகிறார். இதனை தெரிந்து கொண்ட தாமரை ஸ்ருதியிடம் சண்டை போடும் காட்சிகள் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது.

இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஒரு “நாணயத்திற்காக இப்படியாக ஒரு பாசத்தை இழப்பீர்கள், பிள்ளைகளை பாரு… சீ” என கூறியவாறு தாமரை அழுகிறார். அப்போது ஸ்ருதி, இப்படி தேவையில்லாத வார்த்தைகளை விடாதீர்கள் என்கிறார். அதற்கு தாமரை நான் நாணயத்தை எடுத்ததற்கு பேசவில்லை, நீ செய்த வேலை தவறு என கூறுகிறார். அப்போது குறுக்கிடும் பாவனி, நான் ஸ்ருதிக்கு உதவவே இல்லை என கூறிவிட்டு, ஸ்ருதியிடம் இவ்ளோ பிரச்னை செய்து உனக்கு இந்த நாணயம் வேண்டுமா? என்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாவனி மற்றும் ஸ்ருதி அழுது கொண்டிருக்கின்றனர். இசை அவர்களை சமாதானப்படுத்துகிறார். அப்போது ஸ்ருதி, என்னுடைய வளர்ப்பு குறித்து பேசியுள்ளார், பிள்ளையா நீ என்றும் உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? என்றும் பேசியுள்ளார் என கூறி அழும் காட்சிகள் உள்ளது.