சென்னை: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த  மேல்முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு  நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.    நெஞ்சாலை துறை தொடர்பான டெண்டர் கோரியதில் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக திமுக குற்றம் சாட்டியது. 4800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து அந்த வழக்கை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறையான உங்களை தொடர்ந்து விசாரிக்க தடுப்பது என்ன? நீங்கள் விசாரிக்கலாமே, சட்டத்திற்கு உட்பட்ட எந்த விசாரணையையும் நீங்கள் தாராளமாக செய்யலமே? நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டம் எதை அனுமதிக்கிறதோ, அதன்படி விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதிகள் அனுமதி வழங்கி, எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நெடுஞ்சாலை முறைகேடு புகார்: எடப்பாடிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி….

எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு…