சென்னை:
சிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13ஆயிரத்து 331 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் தொகுப்பூதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.