சென்னை:
னியார் பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துவிட்டதாக பாஜக நிர்வாகி நடிகை மதுவந்தி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த ராஜகோபால் என்பவர் தன்னுடைய மகளுக்கு பத்மா சேஷாத்திரி பள்ளியில் யுகேஜி சீட் வாங்குவதற்காக ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தியிடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் சீட்டு வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்து வருவதாக கேகே நகர் காவல் நிலையத்தில் மதுவந்தி மீது புகார் அளித்துள்ளார்.