சென்னை: தமிழ்நாட்டில், பி.எட். மாணவர்கள்  சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கும் நடைபெற உள்ளது. மற்ற படிப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆசிரியர் பணிக்கு  தேவையான  பிஎட் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை  வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்றும் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ் கட்டாயம் மாணவர்கள் கொண்டுவரவேண்டும் என்றும் அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர http://tngasaedu.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரியின் இணையதளத்தை அணுகலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள.