சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக அரசின்  தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

1988ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த இறையன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். நாகை ஆட்சியராக பணியை தொடங்கியவர், தமிழக அரசில்  பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.  ஏற்கனவே, கூடுதல் தலைமை செயலாளராக பதவி வகித்துள்ளார். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சுற்றுலா துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2019 ம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.