சென்னை: அரசு ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், தமிழ்நாடு அரசை கடுமையாக கண்டித்ததுடன்,  ரூ.5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  உயர்நீதிமன்றத்திலேயே பென்சன் வழக்கு நிறைவடைந்துவிட்ட பிறகும், மீண்டும் சம்பந்தப்பட்ட மனு தாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என வாதாடுவதா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், தமிழகஅரசுக்கு ரூ.5லட்சம் அபராதம் விதித்து வழக்கை முடித்து வைத்தது.