சென்னை: தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக 73,31,302 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக  மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் பட்டியலை, மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 73,31,302  ஆக உள்ளது. இவர்களில்,  34,41,360 ஆண்களும்,  38,89,715 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 227 பேரும் உள்ளனர்.

18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 19,09,646 பேரும்,  19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 14,25,786 பேரும்,  24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் 26,86,932 பேர் , 33 வயது முதல் 57 வயது வரை விடுபட்ட பதிவுதாரர்கள் 12,97,693 பேர்,  58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,245 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களையும்  வெளியிட்டுள்ளது. அதில்,

வேலைக்காக பதிவு செய்துள்ள மாற்றுத்திறநாளிகள்  1,38,698 பேர்.  இதில், ஆண்கள் 92,010 பேரும், பெண்கள் 46,688 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில், கை, கால் குறைபாடுடையோர் மொத்தம் 1,07871 பேர். இவர்களில்,  70,909 ஆண்கள், 36,962 பெண்கள்,

விழிப்புலனிழந்தோர் மொத்தம் 16,937 பேர். அவர்களில் 11,668 ஆண்கள், , 5,269 பெண்கள்

காதுகேளாதோர், வாய் பேசாதோர் மொத்தம் 13,890 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 9,433 பேர் ஆண்கள்,4,457 பேர் பெண்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.