சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுங்கள் என மத்தியஅரசின்  வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக மீனவர்கள் 22 பேர் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழக மீனவர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் அவர்களது உடைமைகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

மேலும்,   மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்துவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள், உடைமைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை காவலில் உள்ள 29 தமிழக மீனவர்கள், 82 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

 

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது! இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…