சென்னை: உக்ரைனில் போர் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறத. இந்த நிலையில், அங்குள்ள   தமிழர்களை மீட்க தமிழகஅரசின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.  அங்குள்ள தமிழர்களை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத் துறை ஆணையம் நடவடிக்கை. எடுத்து வருகிறது.

போர் மேகங்களால் சூழப்பட்டுள்ள உக்ரைனில் உள்ள கல்வி நிலையங்களில் ஏராளமான தமிழர்கள் படித்து வருகின்றனர். பலர் வேலை நிமித்தமாக அங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்களை சொந்த மண்ணுக்கு திரும்பும் வகையில், தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, அங்கு வசிக்கும் தமிழர்கள் நாடு நாடு திரும்புவதற்கு உதவி தேவைப்பட்டால் http://nrtamils.tn.gov.in என்ற இணையம் வாயிலாக உதவி கோரலாம் என்றும்,  044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.