சென்னை: 
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் சார்பில், நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாகச்  இன்று சென்னை எக்மோரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கோஷமிட்டனர்.