ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா43 படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ள சூர்யா44 படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது.

சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள சூர்யா-வின் 42வது படமான ‘கங்குவா’ ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள சரித்திரப் படமான கங்குவா 38 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.