சென்னை

மிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக மாசுக் கட்டுப்பாட்டுத் தலைவராக வெங்கடாசலம் பதவி வகித்து வந்தார்.  அவர் மீது எழுப்பப்பட்ட லஞ்ச ஒழிப்பு புகாரின் அடிப்படையில் அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத ஏராளமான பணம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

இதையொட்டி தமிழக அரசு அவரிடம இருந்து மாசுக்கட்டுப்பாடு தலைவர் பதவியைப் பறித்தது.  இதையொட்டி சுப்ரியா சாகு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகக் கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.

சுப்ரியா சாகு தற்போது தமிழக சுற்றுச் சூழல் துறை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.  அவருக்குத் தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகக் கூடுதல் பொறுப்பு அளித்துள்ளது.