ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து நாளை இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்.

2010ம் ஆண்டு வரை தனது படவேலைகள் முடிந்ததும் இமயமலை சென்று ஓய்வு எடுப்பதை வழக்கமாக வைத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார்.

2018ல் காலா படப்பிடிப்புக்குப் பிறகு இமயமலை சென்ற ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படவேலைகள் முடிந்து நாளை மறுநாள் ரிலீசாக உள்ளதை அடுத்து பழைய பாணியில் மீண்டும் இமயமலைக்கு கிளம்புகிறார்.

கடந்த மூன்று நாட்களாக த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ரஜினி 170’ படத்திற்கான போட்டோஷீட்டில் ஈடுபட்டிருந்த ரஜினி இன்று ஜெயிலர் படத்தின் ப்ரிவ்யூ ஷோ பார்க்கிறார்.

இதனையடுத்து நாளை அதிகாலை இமயமலை பயணம் மேற்கொள்ளும் அவர் பத்ரிநாத், ரிஷிகேஷ், கேதார்நாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.