ஜெய்யுடன் இணைந்து மீண்டும் நடிப்பதற்கு தயாராகிறார் இயக்குநர் சுந்தர்.சி.

தான் இயக்கிய அரண்மனை உள்பட சில படங்களில் நடித்தவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக ஜெய் நடிக்க உள்ளார். படத்தை பத்ரி இயக்குகிறார். இவர் சுந்தர் சியின் உதவி இயக்குனர். மேலும் இந்த படத்தை அவ்னி மூவிஸ் தயாரிக்க உள்ளனர்.

ஏற்கனவே சுந்தர் சி மற்றும் ஜெய் கலகலப்பு 2 படத்தில் இணைந்து வேலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜுலை 12 முதல் தொடங்குகிறது. புதுச்சேரியில் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.