பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன் மனைவி சாந்தி கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.